வவுனியாவில் வெடிகுண்டு பொலிசாரால் மீட்பு!!

256

 
வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டார் ரக வெடி குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், தாண்டிக்குளத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தினை பண்படுத்ததியவேளை உழவு இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

இதனை அடுத்து அந்த காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் இந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் மோட்டார் ரக வெடி குண்டினை மீட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.