இந்தியாவில் பிச்சை எடுக்க அடம்பிடிக்கும் ரஷ்ய பிரஜை!!

284

இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன் என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ (24) என்ற இளைஞரது ATM Pin Lock ஆன காரணத்தால், தமிழக காஞ்சிபுர கோயிலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.

இவரை அழைத்த பொலிசார் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தபோதும், அங்கு செல்லாமல் பிச்சை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள கோயிலில் கை நீட்டினால் எல்லோரும் பணம் கொடுக்கின்றனர். நான் ரஷ்யா செல்ல மாட்டேன்.

இந்தியாவிலேயே இருக்கப்போகிறேன். என்னிடம் நிறைய பேர் பேசுகின்றனர். பணம் கேட்டால் உடனே கொடுக்கின்றனர். என்னுடன் செல்பி எடுக்க 10 ரூபாய் கேட்டால், உடனே கொடுத்து விடுகின்றனர். என்னை பேட்டி எடுக்க நீங்களும் பணம் கொடுக்க வேண்டும். நான் இந்தியா வந்தபோது ரூ.4 ஆயிரம் மட்டுமே வைத்திருந்தேன். இப்போது அதைவிட அதிகமாக பணம் வைத்திருக்கிறேன். இந்தியாவில் பிச்சை எடுத்து வாழ முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.