இலங்கை கடலில் மிதந்து வந்த அதிசய பொருள் : இத்தனை கோடி ரூபா பெறுமதியா?

475

கற்பிட்டி கடற்பரப்பில் இறந்த நிலையில் மிகப்பெரிய திமிங்கிலத்தின் உடல் ஒன்று கரையொதுங்கியிருந்தது.

60 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட Spaem well என்ற பெயரில் அடையாளப்படுத்தும் திமிங்கிலத்தின் உடலே கரையொதுங்கி இருந்தது.

குறித்த திமிங்கலம் ஆழ்கடலில் இருந்த ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலத்தின் உடலை கரைக்கு கொண்டு வர சுமார் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த திமிங்கிலத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக பெறுமதியுடனான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி இந்த திமிங்கிலத்திடமும் காணப்படும் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

60 அடி திமிங்கிலத்தில் அம்பர் எனப்படும் வாந்தி காணப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திமிங்கிலங்களின் செரிமான பகுதியில் அம்பர் உற்பத்தியாகின்றது. அது வாந்தியாக வெளியேறும்.

மிகவும் அரிய வகையில் கிடைக்கும் இந்த அம்பர் பல கோடி ரூபா பெறுமதி கொண்டதாகும். பிரபுக்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களுக்கு விசேட பொருளாக அம்பர் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.

பிரேத பரிசோதனையின் பின்னர் அம்பர் தேடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இதே கடற்பரப்பில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர் எனப்படும் வாந்தி மீட்கப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கான பெறுமதியான அம்பரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.