கடந்த வருடம் சில சின்னத்திரை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அதில் நடிகை சபர்ணாவின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்று இப்போது கூட சரியாக தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகை உஷா எலிசபெத் ஒரு பேட்டியில், நானும், சபர்ணாவும் மிகவும் நெருங்கி பழகினோம். ஒரு வருடமாக அவள் தனக்கு எந்த வாய்ப்பும் வரவில்லை என்று எப்போதும் என்னிடம் புலம்புவாள், நான் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவந்தேன்.
ஆனால் இப்படி ஒரு முடிவை சபர்ணா எடுப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அவளின் தற்கொலைக்கு ஏதாவது பிரச்சனையா என்பதை விட வாய்ப்பு இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.