கட்டுப்படுத்த முடியாமல் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் : கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்!!

528

 
14 வயது சிறுவன் காரை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டியதால், கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவருடன் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் கார் பார்க்கிங் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, சூப்பர் மார்க்கெட்டில் இருந்த சிறுவன் கார் பார்க்கிங் செய்து கொண்டிருந்துள்ளான்.

அப்போது கார் ஒன்றை நிறுத்த முற்படும் போது, காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவன் நடந்து வந்து கொண்டிருந்த கணவன், மனைவி மீது மோதியுள்ளான்.

அதன் பின் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் கர்ப்பிணி பெண் இறந்துவிட்டதாகவும், கணவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் காரை ஓட்டிய 14 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

காரில் ஏறி அமர்ந்த சிறுவன் வாகனத்தை பின்னோக்கி ரிவர்சில் எடுத்தபோது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து நடந்ததாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவன் கர்ப்பிணி பெண் மீது மோதுவதற்கு முன்னர் இரண்டு கார்கள் மீது மோதிவிட்டு தான் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளான் என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.