நண்பர்களுடன் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி!!

784

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் 11 இளைஞர்கள் நீராடச் சென்றனர். நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் சிக்கியுள்ளார்.

குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் மீட்க முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மாலை நேரம் கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், ராணுவத்தினரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான விரோஜன பண்டார என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.