வவுனியாவில் நகைக்கடையில் திருடிய நபர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு!!

563

 
வவுனியா பஜார் வீதியிலுள்ள நகையகத்தில் இன்று (15.11.2017) இரவு 7.30 மணியளவில் நகைகளை திருடிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள நகையகமொன்றிக்கு இன்று இரவு 7.30 மணியளவில் மோதிரம் வாங்குவதற்கு நபரோருவர் வந்துள்ளார். குறித்த நபருக்கு பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மோதிரங்களை கையிலேடுத்து பார்வையிட்ட நபர் திடீரென மோதிரங்களை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்று வீதியில் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் திருடன் ஒருவன் நகைகளை திருடிவிட்டான், அவனைப் பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்து அவரின் மோட்டார் சைக்கிலில் ஏறிச் சென்றுள்ளார்.

குருமன்காட்டு பொலிஸ் காவலரணுக்கு அண்மித்த இடம் வந்தபோது இவ்விடத்தில் நிறுத்துங்கள் எனது நகையக ஊரிமையாளர் வருவார் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து குருமன்காடு சந்தியில் மோட்டார் சைக்கில் உரிமையாளர் குறித்த நபரை இறக்கி விட்டுவிட்டு குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு திரும்பி பார்த்த சமயத்தில் குறித்த நபர் உடைகளை மாற்றியுள்ளார்.

உடனே மோட்டார் சைக்கில் சென்று அந்த நபரை கட்டிப்பிடித்து கூச்சலிட்ட சமயத்தில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் விரைந்து குறித்த நபரை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது அவரிடமிருந்து நான்கு மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் உயிலங்குளத்தினைச் சேர்ந்த 24வயதுடைய சிவநேசன் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி ஒரு லட்சத்து இருபதாயிரம் (5மோதிரங்கள் – 3 பவுண்) என நகையக உரிமையாளர் தெரிவித்தார்.