நான் கொலை செய்யவில்லை.. பொலிஸ் தான் காரணம் : கைதான மாணவன் பரபரப்பு!!

261

டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்தியுமான் தாகூரை, இவனை அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், சந்தேகத்தின் பேரில் முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

விசாரணையில், பேருந்து ஓட்டுனருக்கு கொலையில் எந்த சம்பந்தமும் இல்லை என சிபிஐ தெரிவித்தது. மேலும், சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் சிபிஐ கூறியது.

இந்நிலையில், மத்திய அரசின் குழந்தைகள் நல அமைப்பினர், சட்டப்படி சிறுவனின் வாக்குமூலத்தினை கேட்டுவிட்டு சான்று அளிக்க வேண்டியது அவசியம். எனவே, அவர்களின் முன்னிலையில் பேசிய சிறுவன் கூறுகையில், ‘நான் கொலை செய்யவில்லை. என்னை கட்டாயப்படுத்தி சிபிஐ ஒப்புக்கொள்ள சொல்லியது’ என கூறியிருக்கிறான். இதனால் இந்த வழக்கு அதிரடி திருப்பத்தினை சந்தித்துள்ளது.