இலங்கைப் பெண்ணின் அதிரடிக் கேள்வி : பதிலளிக்குமா ICC?

652

 
சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ICC) ட்விட்டரில் இலங்கைப் பெண் எழுப்பிய கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICCயும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது.

இதனை கவனித்த இலங்கை பெண் ICC மீது நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.அதில் ’கோஹ்லி-அனுஷ்கா திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி தான். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எப்போது திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல தொடங்கியது? இதுவரை வேறு யாருக்காவது வாழ்த்து கூறியதுண்டா என்பது போன்ற கேள்வியை எழுப்பியுள்ளார்’?

அனைவரையும் சிந்திக்க வைத்துள்ள அவரின் இந்த கேள்வி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.