வவுனியாவில் நான்கு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு!!

259

 
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (EPRLF) மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பரமேஸ்வரன், தர்மலிங்கம், மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் தேவராசா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.