வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!

738

 
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று (15.01.2018) காலை 9 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரியின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகர கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா, சிறப்பு விருந்தினர்களாக மும்மதப் பெரியோர்கள் கல்லூரியின் பிரதி அதிபர் கு.முல்லைக்குமார், ஆரம்பப்பிரிவு அதிபர் ஞானமதி மோகனதாஸ், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் செ.சந்திரகுமார் (கண்ணன்) பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் நிர்வாகிகள், இணைப்பாடவிதான பிரதி அதிபர் திருமதி எஸ்.ரவீந்திரன், மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.