சொகுசு வேனை போலி பத்திரங்களுடன் அடகு வைக்க முற்பட்ட இருவர் கைது!!

233

மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தலவாக்கலை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா எலயில் உள்ள வாகனம் விற்பனை செய்யும் நிலையத்தில் இருந்து 80 இலட்சம் ரூபா பொறுமதியான வாகனம் ஒன்றை லீசிங் முறையில் கொள்வனவு செய்து, அந்த வாகனத்துக்கு போலியான பத்திரங்களை தயாரித்து 35இலட்சசம் ரூபாவிற்கு ஆடகு வைக்க தலவாக்கலை பகுதிக்கு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இ்று (17) புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.

தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் இது போன்ற வியாபாரத்தில் பலவருடகாலமாக ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட இருவரும் நுவரெலிய நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.