நடுவீதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

312

திருவாரூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் நடுவீதியில் வைத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர், சுமதி என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நித்யா, தரணிதரன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

தர்மராஜ் தினமும் மது அருந்திவிட்டு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை தர்மராஜ் தனது மனைவி சுமதியுடன் கடைத் தெருவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், தனது மனைவி சுமதியின் கழுத்தை நடுவீதியிலேயே கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள், தர்மராஜை பிடித்து கட்டி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார், தர்மராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.