இன்று திருமண நிச்சயம் நடக்கவிருந்த தங்கையை வெட்டி கொன்ற அண்ணன்!!

378

தமிழ்நாட்டில் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த தங்கையை நேற்றிரவு அண்ணன் வெட்டி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன் (57), இவரது மகள் ஹேமலதா (27). இவருக்கும் ஒரு இளைஞருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு ஹேமலதா வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சிவசுப்பிரமணியனின் அண்ணன் மகன் சக்திகுமார் (35) உனது மகளுக்கு நிச்சயம் எப்படி நடக்கிறது என பார்க்கிறேன் என கூறியபடி சிவசுப்பிரமணியனின் கையில் அரிவாளால் வெட்டினார்.

இதை ஹேமலதா தடுக்க முயன்ற நிலையில் தங்கை முறையான அவரையும் சக்திகுமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிவசுப்பிரமணியனின் இன்னொரு சகோதரர் வைரவேல் (50) அங்கு வந்தார். அவரையும் சக்திகுமார் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அரிவாள் வெட்டுப்பட்ட மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்த நிலையில் மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில், சிவசுப்பிரமணியனுக்கும், திருஞானசம்பந்தத்தின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியன் வீட்டில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது என சக்திகுமார் சவால் விட்டு மிரட்டி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள சக்திகுமாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.