வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை” நூல் அறிமுக விழா!!

859

தோழர் சி.கா.செந்திவேல் எழுதிய “வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை” நூல் அறிமுக விழா நாளை (18.02.2018) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் (பிரதேச செயலகம் அருகாமையில்) நி.பிரதீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வரவேற்புரையை யோ.கஜானன் வழங்கவுள்ளதுடன் ஆய்வுரையை மருத்துவர் செல்வராஜா மதுரகன் வழங்கவுள்ளார்.

மேலும் கருத்துரைகளை வவுனியா தேசியக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், இயன் மருத்துவர் வேலும் மயிலும் துவாரகன், பிரஷாந்தினி பிரதீபன் (புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு) ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

விழாவின் ஏற்புரையை நூல் ஆசிரியர் சி.கா.செந்திவேல் நிகழ்த்தவுள்ளதுடன் நன்றியுரையை சு.செல்வகுமாரன் வழங்கவுள்ளார்.

இவ்விழாவிற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.