வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளன : ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ!!

352

Mahindaசர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரை சுதந்திரமாக பயணம் செய்ய கிடைத்துள்ளமை தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளன. வடக்கில் நிலைக் கொண்டிருந்த இருந்த 70 ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் 12 ஆயிரமாக குறைத்துள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் இராணுவம் இருக்க வேண்டும். ஒரு இனத்தால் இன்னுமொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது என்றார்.