வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!

450

Sivanசிவனடியார்களே!!

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்த இலன்காதீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு நிகழும் ஜய வருஷம் தட்சணாயம் ஆடி மாதம் 05 ஆம் நாள் (21.07.2014) திங்கட்கிழமை தசமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய சுபதினத்தன்று பகல் 11 பதினோரு மணிக்கு துவஜாரோகணமாகி (கொடியேற்றம் )ஆடி மாதம் 14 ஆம் நாள்(30.07.2014) புதன்கிழமை பூர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற திருவருள்கைகூடி உள்ளதால் அடியார்கள் யாவரும் வந்து தரிசித்து அம்பாளின் இஸ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு திருவிழா தொடர்பான நோட்டீஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 024-22222651 என்ற கோவில் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

உற்சவநிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் எமது உத்தியோகபூர்வ facebook : sivan Kovil Kovilkulam என்னும் பக்கத்தின் வாயிலாகவும் வவுனியா செய்திகளை தாங்கிவரும் www.vavuniyanet.com என்னும் இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என்பதை பக்தர்களுக்கு அறியத் தருகிறோம் .

இங்கனம்
ஆலய அறங்காவலர்களும் உபயகாரர்களும்