மாகாண மட்ட பௌர்ணமி விழாவிற்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில்!!

270

மாகாண மட்ட பௌர்ணமி விழாவிற்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக இன்று (25.7) கலந்தாலோசிக்கப்பட்டது.

துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி மாலினி வெனிர்ரன் அம்மணி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஒட்டுசுட்டான் கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கலைஞர்கள், சமூகத்துறைசார் மேம்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி வெனிர்ரன் அம்மணி , ஒட்டுசுட்டான் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு த.பங்கயச்செல்வன், ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீ. பிரதீபன், பிரததேச பண்பாட்டுப் பேரவைப் பொருளாளரும் கற்சிலைமடு அ.த.க பாடசாலையின் அதிபருமாகிய நாகேந்திரராசா ஆகியோர் முக்கியத்தவம் பெற்றிருந்தனர்.

-வே.முல்லைத்தீபன்-
1

2