காவலர் கணேசனை கொன்றது எப்படி என கள்ளக்காதலியிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

872

Vanithaசிதம்பரத்தில் படுகொலை செய்யப்பட்ட துணை ஆய்வாளர் கணேசனின் கள்ளக்காதலி வனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருந்த கணேசன் (32), கடந்த 22ம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்த பொலிஸ் விசாரணையில் அவரை அவரது கள்ளக்காதலி வனிதா கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பின்னர் வனிதாவை விருத்தாசலத்தில் பொலிசார் மடக்கிப் பிடித்து தனி இடத்தில் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க சிதம்பரம் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டதால், வனிதாவை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் வனிதாவை காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் முடிவு செய்திருப்பதாகவும், அவரை சம்பவ இடத்துக்கு அழைத்துச்சென்று எப்படி கொலை செய்தார் என்பதை நடித்துக்காட்டச்சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஒரு காவல் அதிகாரியை தனி ஆளாக வனிதா கொலை செய்திருக்க முடியாது என்றும், அவருக்கு யாராவது உதவியிருக்க வேண்டும் எனவும் பொலிசார் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.