வவுனியா மாவட்டத்தின் 25 சாரணர்கள் சாரண ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில்!!

329

Saranar

இலங்கை சாரண சங்கத்தினால் நடைபெறும் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சாரண ஜனாதிபதி விருதினை பெற்று கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (30.07.2014) மாலை 4 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மணடபத்தில் நடைபெறவுள்ளது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொள்வதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் வவுனியா மாவட்ட சாரணர்களில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அ.அனந்தன், சு.நிரோசன், கே.லிஷாந்தன், எஸ்.கேசவன், த.நிகேதன் மற்றும் ஓமந்தை மத்திய கல்லூரியைச் சேர்ந்த எஸ்.கோபிராஜ், ஆர்.கஜீபன், வி.ரம்ஸ்சன், ஆர்.பவேந்திரன், என்.தர்சுதன் ஆகியோருடன் பெண் ஜனாதிபதி சாரணர்களான எஸ்.நிலாந்தி, ஆர்.நிலானி, ஜி.பிரதிகா, அ.நிலக்ஸ்சனா, எஸ்.சத்தியா, பி.கீர்த்திகா ஆகியோருடன் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எல்.டெனிஸ், ஜெ.துலக்ஸ்சன் ஆகியோரும் விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த ரி.மோகன்ராஜ், எஸ்.துஜான், வி.சஜீவ்நாத், கு.மதுசன், வி.அனோஜன், ஜெ.பிரதீபன், வ.பிரதீபன் ஆகிய சாரணர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவர் திரு எஸ்.காண்டீபன் தெரிவித்தார்.