ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!!

281

யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. யாழ். பிரதான பஸ் நிலையம் முன்பாக இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வடக்கை சேர்ந்த ஊடக அமைப்புக்கள் மற்றும் தெற்கைச் சேர்ந்த ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்து இருந்தன.

இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள், முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

யாழிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 ஊடகவியலாளர்களை ஓமந்தையில் இராணுவமும் பொலிஸாரும் சேர்ந்து சதி வலையில் சிக்க வைத்ததாக கூறப்படும் சம்பவத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இப் போராட்டம் நடைபெற்றது.

 

J1 J2