வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் குடாகச்சகொடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
இவ் விபத்தில், திருகோணமலை, அன்புவெளிபுரத்தைச் சேர்ந்த கே.வைகுந்தன்(35), இவரது மனைவியான வை.மங்கையர்க்கரசி(31), இவர்களது மகன் வை.சாயிதரன்(3), மகள் வை.சாயிராணி (1) ஆகிய நால்வரே காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.
திருகோணமலையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
–