எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!!

497

EBOLO

எபோலா வைரஸ் பாதிப்பு குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அண்மையில் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் மர்ம நோயினால் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திபால சிறிசேனாவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மரணம் தொடர்பில் பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் காரணமாக ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ஏ.கே. சுவர்ணதிலக்கா என்ற பெண்ணே உயிரிழந்திருந்தார்.
இந்த மரணம் தொடர்பில் முழு அளவில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.