வவுனியா ஊடகவியலாளர்களின் புகைப்பட கண்காட்சி செப்டெம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறவுள்ளது!!

380

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களின் புகைப்பட கண்காட்சியொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி வவுனியாவில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“வன்னி 14” என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட செயலகமும் வவுனியா தெற்கு பிரதேச செயலகமும் இணைந்து எற்பாடு செய்துள்ள ஊடகவியலளார்களின் புகைப்படங்களின் தொகுப்பு அடங்கிய இக் கண்காட்சியில் சிறப்பு புகைப்பட விருதும் வழங்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் புகைப்பட கண்காட்சியில் இதுவரை ஊடகவியலாளர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவை எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை காட்சிப்படுத்தி இக் கண்காட்சி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர தெரிவித்தார்.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

21 22 23