திருகோணமலை எழுத்தாளர் அனிஸ்டன் ஜெயராசாவின் கின்னஸ் சாதனை முயற்சி!!

307

Trinco

திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர் அனிஸ்டன் ஜெயராசா என்பவர் (56) கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக 12 மணித்தியாலயங்கள் தொடர்ந்து எழுதியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை கரன்சி இல்லாத உலகம் தலைபை்பிலேயே இவர் எழுதினார்.

இதன் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலபதி, எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபானி மற்றும் நகரசபைத் தலைவர் க. செல்வராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 12 மணித்தியாலயங்கள் எழுதிய அனிஸ்டன் ஜெயராவின் உடல் நிலை மிகவும் ஆரோக்கியமாகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.