ரைஸ் பக்கெட் சலஞ்ச் உருவாக்கிய மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது!!

505

ரைஸ் பக்கெட் சலஞ்சை உருவாக்கிய ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதிக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரைஸ் பக்கெட் சலஞ்ச் என்ற பெயரில் ஏழைகளுக்கு ஒரு படி அரிசி தானம் வழங்கும் பிரச்சாரம் தொடங்கியது.

அதாவது உணவு தேவைப்படும் யாராவது ஒருவருக்கு ஒரு படி அரிசி, வழங்கி அதை படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட வேண்டும்.

அப்போது பிற நண்பர்கள் இதை செய்ய முன் வருகிறார்களா என்று சவால் விட்டு, அவர்களின் பெயர்களையும் அந்த பதிவில் டேக் செய்யலாம். அதன் மூலம் மேலும் பலர் இதை செய்ய முன்வருவார்கள் என்பதே இந்த சலஞ்சின் நோக்கம்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சுலதா கலாநிதி என்பவர் ரைஸ் பக்கெட் சேலஞ்சை தொடங்கி வைத்தவர். இவரது சமூக தொண்டை பாராட்டும் வகையில் அவருக்கு கர்மவீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐகொங்கோ (iCONGO) தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சர்வதேச கூட்டமைப்பும், ஐ.நா.வும் விருதினை வழங்குகிறது.

இந்த விருது சிறிய காரியங்கள் மூலம் உலகில் பெரிய மாற்றம் ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. 2015 மார்ச் 23ல் டெல்லியில் நடைபெறும் விழாவில் மஞ்சுலதா கலாநிதிக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இத்தகவலை ஐகொங்கோ நிறுவனர் ஜெரோனினோ அல்மைதா உறுதிப்படுத்தியுள்ளார்.

R R1 R2