யாழில் 5 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது!!

321

Abuse

யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 67 வயது வயோதிபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் வயோபதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர்களால் நேற்று முன்தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், வயோதிபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.