வவுனியாவில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நர்த்தனாஞ்சலி நிகழ்வு!!

373

யாழ் இந்திய துணைத் தூதரகமும் வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் இணைந்து வழங்கிய நர்த்தனாஞ்சலி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இந்திய தூதரகத்தின் துணைத்தூதர் சு.தட்சணாமூர்த்தி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிஷோர் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் பல்வேறு வகையான நடனங்கள் மேடையேற்றப்பட்டிருந்ததுடன் பெருமளவிலான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

10 11 13 14 15 16