வவுனியா இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின விழா பாடசாலையின் அதிபர் திருமதி நடராஜா தலைமையில் 07.10.2014 காலை 10.00 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கௌரவ இ.இந்திரராசா வடமாகாணசபை உறுப்பினருக்கு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நடைபெற்றதுடன் நடனம், கவிதை மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.