வவுனியா பூந்தோட்டத்தில் வெல்டிங் கடை தீயில் எரிந்து நாசம்!!

368

வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள கடையொன்று நேற்று (14.10) திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. பூந்தோட்டம் ஸ்ரீநகரில் உள்ள வெல்டிங் கடையொன்றே நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்த வெல்டிங் கடையில் பணிபுரிபவர்கள் மதிய உணவுக்காக கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற போதே தீவிபத்து இடம்பெற்றது. கடை தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸாரும், கடையில் பணிபுரிபவர்களும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பல லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்தத் தீவிபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

50 51