சங்கக்கார, ஜெயவர்த்தனே மட்டும் இலங்கை அணி அல்ல : சனத் ஜெயசூரிய!!

291

Sanath

இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை பாதியிலே கைவிட்டதால் இந்திய அணி இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.

இந்த தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் அணி தெரிவாளர்களின் தலைவராக உள்ள சனத் ஜெயசூரிய ஆங்கில இணையத்தளம் ஒன்றிற்கு கூறுகையில், சில பந்து வீச்சாளர்களுக்கு இந்தியா போன்ற வலிமையான அணியிடம் தன் திறமையை காட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

லகிரு திரிமன்ன, தினேஷ் சந்திமால் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல போன்ற இளம் துடுப்பாட்டக்காரர்கள் அணியில் இடம்பெறவுள்ளனர்.

இந்த அணி சங்கக்காரா, ஜெயவர்த்தனே மட்டுமே இலங்கை அணியில் இருக்கிறார் என்று நினைக்காமல் செயல்பட வேண்டும். ஓவ்வொருவரும் தனக்குரிய பொறுப்புணர்வை புரிந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.