2014 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஷ்ட பிரிவு மாணவர்களுக்கான கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் தரம் எட்டில் கல்வி கற்கும் செல்வி சர்மிகா சர்வானந்தன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.
இதன் பின் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் இடம்பெற்ற சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் கனிஷ்ட பிரிவில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளி பதக்கத்தை தனதாக்கி பாடசாலைக்கும் இலங்கை திருநாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் இம் மாணவி இந்தோனேசிய நாட்டின் கல்வி அமைச்சர் வெள்ளி பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் இம்மாணவி வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசியரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தேசிய ரீதியில் பங்கு பற்றி வெற்றியும் பெற்றுள்ளார். எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த செல்வி சர்மிகா சர்வானந்தனை பாடசாலை சமூகத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.