வவுனியா அரசன்குளத்தில் 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய சுரேந்திரன் நற்பணி மன்றம்!!

225

யுத்தத்தின் பின் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாடும் 5 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் கனிசியஸ், மற்றும் சமுர்த்தி சங்க, மாதர் சங்க தலைவி நவரத்தினம் மீனாம்பிகை ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த உலர் உணவு பொதிகள் சுரேந்திரன் நற்பணி மன்ற ஸ்தாபகர் சுரேந்திரன் அவர்களால் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் மூலம் வழங்கி வைக்கப்பட்டன.

தாய் .தந்தையை இழந்து பேத்தி ஈஸ்வரியுடன் வாழும் சிறுவன் மகேந்திரன் லிதர்சன், அவர் தங்கை மதுசா ஆகியோருக்கும், 3 பிள்ளைகளுடன் மலசலகூடம், கிணறு உட்பட அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாழும் நீதிராசா சாந்தகுமாரிக்கும், ஒருகால், ஒரு கை ஊனமுற்ற தொழில் ஏதும் செய்ய இயலாத ஈஸ்வரநாதன் தவரூபனுக்கும், தாய், தந்தை இழந்து வாழ்வாதாரத்துக்கு கஷ்ட படும் தர்மராசா கார்த்திகாவுக்கும்

2009 தொடக்கம் 2011 பூசா முகாமில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கபட்ட முன்னாள் போராளியான நவரத்தினம் கிருபாகரனுக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர்உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன.

வே.சுரேந்திரனின் சுரேந்திரன் நற்பணி மன்ற இந்த உதவிகளை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன்), மாணிக்கம் ஜெகன் ஆகியோர் நேரடியாக சென்று வழங்கி இருந்தனர்.

004q1 004r1 DSCN2054 DSCN2063 DSCN2077 DSCN2085 DSCN2090 DSCN2091