வட மாகாணசபை உறுப்பினர் இ. இந்திரராஜாவுக்கு மிரட்டல்!!

337

Indirarasa

வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு என உலக உணவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் இந்த மோசடிகளில் ஈடுபட்டதாக உலக உணவுத் திட்டத்தின் வடமாகாண அதிகாரி க.றொய்ஸ் எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இது தொடர்டபில் கல்வி அமைச்சின் கவனத்திற்கும் சில அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தேன். இவ்வாறு கொண்டு வரப்பட்மை தொடர்பிலேயே குறித்த அதிபர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவற்றை ஏன் வெளிப்படுத்தினீர்கள் என்று கேட்டு மிரட்டல் விடுத்தார்.

இது பற்றி நான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் கல்வி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இதேவேளை, குறித்த அதிபர் தற்போது வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றின் அதிபராக பொறுப்பேற்றுள்ள அதேவேளை, இவ் முறைப்பாடு தொடர்பில் வலயக்கல்விப் பணிமனை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

-அததெரன-