மேற்படி நிகழ்வு 12.11.2014 அன்றுகாலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதானமண்டபத்தில் அதிபர் திரு.வஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் பிரதம விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.தர்மகுலசிங்கம் அம்மா அவர்களும், வீ.பரஞ்சோதி (நூலக ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஆசிரியநிலைய முகாமையாளர் வவுனியா தெற்கு) அவர்களும் கௌரவ விருந்தினராக தமிழ் அறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.வசந்திகுலராசா (வலயப் பிரதிநிதி வவுனியா தெற்கு) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் தேசியவாசிப்பு மாதத்தின் 10வது ஆண்டு நினைவு போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டமை பாராட்டத்தக்கதாகும். விழாவினை நூலகப் பொறுப்பாசிரியர் விமலாம்பிகை யோகராசாஅவர்கள் ஒழுங்குபடுத்திநெறிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.