வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!!

317

pow

வவுனியா – தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் பன்றிகளைக் கொல்லவே இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.