சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் சங்கக்கார!!

362

kumar

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்கார சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் வீரராக வலம் வரும் சங்கக்கார அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்கார ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரே இலங்கை மண்ணில் சங்கக்காரா சந்திக்கும் இறுதிப் போட்டியாக அமையும்.

வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணப் போட்டிகளின் போதே நான் 2015ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுவேன் என சங்கக்கார அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.