முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் தீ!!

300

fireமுல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ, பரவியதால் வைத்தியசாலையின் கதிரியக்கப்பிரிவு (எக்ஸ்ரே) சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் வைத்தியசாலை ஊழியர்களும் உதவியதாகவும் தெரியவருகின்றது. இந்த தீயில் கதிரியக்கப் பிரிவில் இயந்திரமொன்று முற்றாக கருகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.