வவுனியாவில் கன மழை 15 குடும்பங்கள் இடம்பெயர்வு!!

863

Va

வவுனியாவில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழையினால் இதுவரை 15 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று பெய்த கடும் மழையினால் வவுனியா செட்டிக்குளத்தில் 14 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்களது வீடுகளும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் புளியங்குளத்தில் ஒரு குடும்பமும் இடம்பெயர்ந்துள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கலாபோகஸ்வௌ கிராமத்திலும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலும் மழையின் காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை செட்டிகுளம் வேப்பங்குளம் உடைப்பெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவிதார். இதேவேளை வவுனியாவின் தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளதுடன் பிரதான போக்குவரத்து மார்க்கங்களிலும் நீர் தேங்கி நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியின் காமினி மகா வித்தியாலத்திற்கு அருகிலும் வவுனியா- யாழ்ப்பாணம் பிரதான வீதியின் தாண்டிக்குளம் பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் வாகன போக்குவரத்திற்கும் பெரும் தடையேற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மக்களது இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 3