வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியில் பெற்றோர் தின விழா நேற்று (03.12) புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கௌரவ விருந்தினராக தெற்கு தமிழ் பிரதேச சபை உப தலைவர் திரு.ரவி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திடீர் மரண விசாரணை அதிகாரி திரு.சுரேந்திரசேகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர்,
கூட்டுறவு காப்புறுதி உத்தியோகத்தர்கள், சித்தாலேப்ப நிறுவன உத்தியோகத்தர்கள், முத்து மாரி அம்மன் ஆலய தலைவர் திரு.தியாகராஜா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவிதரன், சமூக ஆர்வலர் திரு.மகேந்திரராஜா, புளொட் முக்கியஸ்தர் திரு.கண்ணதாசன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கோயில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கோயில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. இதனை வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சித்தாலேப்ப நிறுவனம் மற்றும் கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சித்திர போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.