வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் இளங்கதிர் முன் பள்ளியின் பிரியாவிடை வைபவம்!!

308

வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் இளங்கதிர் முன் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்று தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் 04.12.2014 அன்று இளங்கதிர் முன் பள்ளியில் ஆசிரியை செல்வி வீ .ரேணுகா தலைமையில் இடம் பெற்றது .

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியர்கள் சந்திரகுமார் (கண்ணன் )துளசிகன் , குணசேகரம் (குணம் ) மற்றும் கிராமசேவையாளர் செல்வி செ.அனுசியா , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாதர் சங்க தலைவி உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் உரையாற்றிய மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்கள் மாணவர்கள் நன்கு கற்று நல்ல பிரஜை ஆவது மட்டும் இன்றி இன மத மொழி பேதமின்றி சேவை செய்யும் குடிமகனாகவும் ஆக வேண்டும் என கேட்டு கொண்டார் .

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியரும்.தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் கல்வியே இனி எம் எதிர்கால மூலதனம் எனவே நீங்கள் நன்றாக கற்று நற்பிரசைகளாக வரவேண்டும் என்று கேட்டு கொண்டார் .

பின்னர் மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்களும், முன்பள்ளியால் சான்றிதழ்களும் வழங்க பட்டன. முன் பள்ளி ஆசிரியையின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

DSCN2847 DSCN2863 IMG_5940 IMG_5942 IMG_5947 IMG_5948 IMG_5949 IMG_5951 IMG_5955