வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் இளங்கதிர் முன் பள்ளியில் ஆரம்ப கல்வி கற்று தரம் 01க்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் 04.12.2014 அன்று இளங்கதிர் முன் பள்ளியில் ஆசிரியை செல்வி வீ .ரேணுகா தலைமையில் இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியர்கள் சந்திரகுமார் (கண்ணன் )துளசிகன் , குணசேகரம் (குணம் ) மற்றும் கிராமசேவையாளர் செல்வி செ.அனுசியா , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , மாதர் சங்க தலைவி உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் உரையாற்றிய மீள் எழுச்சி திட்ட பிரதி திட்ட பணிப்பாளர் டி.எ.டி.ரஞ்சித் அவர்கள் மாணவர்கள் நன்கு கற்று நல்ல பிரஜை ஆவது மட்டும் இன்றி இன மத மொழி பேதமின்றி சேவை செய்யும் குடிமகனாகவும் ஆக வேண்டும் என கேட்டு கொண்டார் .
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட ஊழியரும்.தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் கல்வியே இனி எம் எதிர்கால மூலதனம் எனவே நீங்கள் நன்றாக கற்று நற்பிரசைகளாக வரவேண்டும் என்று கேட்டு கொண்டார் .
பின்னர் மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்களும், முன்பள்ளியால் சான்றிதழ்களும் வழங்க பட்டன. முன் பள்ளி ஆசிரியையின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.