வவுனியாவில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய “விஞ்சிடுமோ விஞ்ஞானம்” கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்!!

1344

3

திருமதி மைதிலி தயாபரன் எழுதிய “விஞ்சிடுமோ விஞ்ஞானம்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை (20.01.2015) செவ்வாய்க்கிழமை பகல் 1.00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125வது ஆண்டை முன்னிட்டு பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இன் நிகழ்விற்கு தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமைதாங்கவுள்ளார்.

பிரதம விருந்தினராக அருட்சகோதரி திரேசா சில்வா (அதிபர் -இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக செல்வி மேரி அன்றோனியா ஸ்ரனிஸ்லாஸ் (முன்னாள் பிரதி அதிபர் – இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன் நிகழ்வில் கலை ஆர்வலர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Mai