வவுனியாவில் இளைஞனைத் தாக்கி பணத்தைப் பெற முயற்சித்த மூவருக்கு விளக்கமறியல்!!

308

A5

வவுனியாவில் இளைஞன் ஒருவரைத் தாக்கி மோசடியான முறையில் அவரிடம் கடிதம் பெற்ற இளைஞர்கள் மூவரை தாம் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..

தன்னைத் தொலைபேசியில் அழைத்த மூவர் மறைவான இடத்தில் வைத்து தாக்கி மோசடியான முறையில் கடிதம் பெற்றதுடன், தனது மோட்டார் சைக்கிளையும் பெற்றுக்கொண்டனர் என்று பாதிக்கப்பட்ட இளைஞர் கடந்த சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இது தொடர்பாக வவுனியா, குருமன்காடு பகுதியில் உடல் வலுவூட்டல் நிலையம் ஒன்றை நடத்தும் நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.