வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!!

503

V1

வவுனியாவில் நேற்று(22.02) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வவுனியா தமிழ் மகா வித்தியாலத்திற்கு முன்பாக போக்குவரத்து பொலிஸாரிற்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றும், யுவதி ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த போக்குவரத்து பொலிஸார் இருவர் உள்ளிட்ட மூவர் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.