சட்டவிரோதமான முறையில் வீசா எதுவுமின்றி நாட்டுக்குள் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு 85 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு சுமத்ராவின் பெல்வானா பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 310 சட்டவிரோத குடியேறிகளை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். படகுகளின் மூலம் குறித்த சட்டவிரோத குடியேறிகள் இந்தோனேசியாவை சென்றடைந்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆப்கானிஸ்தான், மியன்மார், பாலஸ்தீனம், சோமாலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.