வவுனியாவில் கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!

535

Boy

வவுனியா – ஓமந்தை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா பாலமோட்டை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.