வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வடக்கு சாரணர்களின் நட்புறவுப் பாசறை!!

392

1

வவுனியா வடக்கு கல்வி வலயப் பாடசாலைச் சாரணர்களின் நட்புறவு பாசறை நிகழ்வு இன்று(01.03) வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சாரணர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பாசறை நிகழ்வில் வவுனியா வடக்கு பாடசாலைகளைச் சேர்ந்த 150 சாரண மாணவர்கள் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந் நிகழ்வில் கேகாலை மற்றும் திருகோணமலையில் இருந்தும் சாரணர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் சாரணர் முகாமை அமைக்கும் நிகழ்வில் வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி சாரணர் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.