யாழில் 13 கிலோ வெடி மருந்துடன் இருவர் கைது!!

428

arrest

13 கிலோ வெடி மருந்துடன் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (02.03) கைது செய்துள்ளனர்.

யாழ். குருநகர் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இருவர், நேற்று குருநகர் இறங்துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்கு, ஆயத்தப்படுத்திய வேளையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-அத தெரண-