10 மாத வயதில் 41 இறாத்தல் நிறையுடன் காணப்படும் பெண் குழந்தையொன்றின் இராட்சத தோற்றத்தை குணமாக்க பெற்றோர் போராடி வரும் சம்பவம் இந்திய ஜர்க்கன்ட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது.
மொஹமட் சலீம் (28) மற்றும் ஷபானா பர்வீன் (25) தம்பதியின்
குழந்தையான அலியா சலீமே இவ்வாறு இராட்சத தோற்றத்தைக் கொண்டுள்ளது.அந்தக் குழந்தையின் நிறை 6 வயது சிறுமியொருவரது நிறையை ஒத்ததாகும்.
பிறந்த போது 9 இறாத்தல் நிறையுடையதாக இருந்த அந்தக் குழந்தையின் நிறை வேகமாக அதிகரித்து வருவதால் அடிக்கடி உடைகளின் அளவை மாற்ற நேரிடுவதாக ஷபானா பர்வீன் கூறினார்.
அலியாவின் உடல் நிறை இவ்வாறு அதிகரித்து வருவது அவரது
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அந்தக் குழந்தையின் உடல் பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையை வழங்க போதிய பண வசதியில்லாமல் அலியாவின் பெற்றோர் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.