2 வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பா கைது!!

721

Abuse

14 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த இரு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததாக சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி ஜின்னாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

38 வயதுடைய சந்தேக நபர் வாகனம் ஒன்றில் சாரதி உதவியாளராகப் பணியாற்றி வருபவர் எனவும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் பிரகாரம் இச்சந்தேக நபர் குறித்த சிறுமியின் சித்தப்பா எனவும் தெரியவந்திருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தாயின் பெற்றோருக்கு பணிவிடை செய்வதற்காக சிறுமியின் தாய் வீட்டை விட்டுச் சென்ற வேளை முதற்தடவையாக சிறுமியை சந்தேக நபர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை அவ்வப்போது சந்தேக நபர் குறித்த சிறுமியை இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செயலை அறிந்து கொண்ட சிறுமியின் தாய் இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.